இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகின்றனர். ஆனால், அவர்களில் 8.25 சதவீதம் பேர் மட்டுமே படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைப் பெற முடிகிறது என நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இது, இந்தியாவின் கல்வி முறைக்கும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளும் திறன்களும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பல கல்வி நிலையங்களில் பாடத் திட்டங்கள் காலாவதியானவையாக இருப்பதாகவும், மாறிவரும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப போதுமான அளவுக்கு பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.