மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு, சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் விற்பனையை அமைச்சர் மதன் ராஜா பூம்புகார் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
கீ-செயின்கள், டெரகோட்டா பாட்டில்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் என இவை அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் அவற்றை விற்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.