சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:34
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் வ.உ.சி.நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன் (54); வெல்டர். இவரது மனைவி ஜெயந்தி (49), மகன் பிரவீன் (16). பிரவீன் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிரவீன் சரியாகப் பள்ளிக்குச் செல்லாததால் காசிநாதன் அவரைக் கண்டித்தார். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 5:00 மணிக்கு வீடு திரும்பிய காசிநாதன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டார். உறவினர்களுடன் வீடு, அருகிலுள்ள பல இடங்களில் தேடியும் ஜெயந்தி மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து காசிநாதன் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெயந்தி மற்றும் பிரவீனைத் தேடி வருகின்றனர்.