சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:34
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையில் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்றும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கினர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொடங்கியது; அது நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது, புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.