இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

காணாமல் போன ரூ.40 லட்சம் மதிப்பு 192 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

சென்னையில் காணாமல் போன 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 192 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் தொலைந்து போன செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அந்த நிகழ்வில் பேசிய சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் பிரின்சி, "செல்போன் தொலைந்தால் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; CEIR தளத்தில் புகாரைப் பதிவு செய்தாலே போதும் — சைபர் கிரைம் போலீஸார் அந்த செல்போனைக் கண்டுபிடித்து விடுவோம்" என்றார்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/districtnews/192-missing-mobile-phones-worth-40-lakh-handed-over-to-their-owners-12405115

Share Facebook X WhatsApp Telegram