நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் ஜெபஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பேருந்தில் பயணித்த சக மாணவிகள் மற்றும் பயணிகள் தட்டிக்கேட்டதையும் பொருட்படுத்தாமல் ஜெபஸ்டின் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதைக் கண்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் அவரை பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.